இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிமாது முன்வந்த காலே-இன் பங்
காணுமல் கூடாமல் வேறென்ன வேலை?
அவளாகத் தான்வந்து மாலை-சூட்டி
அணைப்பாள் தொடுத்தே கொடுப்பேன்ட்ா மாலை
கண்காட்டி விட்டங்குச் செல்வாள்-நானும்
கைகாட்ட என்பால்வந் தேதேதோ சொல்வாள்
பண்காட்டும் பாட்டொன்று சொல்வேன்-இன்னும்
பாடென்று பாடென்று நெஞ்சிற்பு கல்வாள்
நெஞ்ச்ங்கள் ஒன்ருகும் போது-மற்ற
நினைவேதும் இல்லாமல் செல்வேன் விண்மீது
கொஞ்சுங்கள் கொஞ்சுங்கள் என்றே-வஞ்சி
கொண்டாடி மன்ருடிக் கெஞ்சுவாள் நின்றே
என்பாட்டில் இன்பங்கள் கண்டாள்-விஞ்சும்
எழில்கொண்ட பொற்பாவை நீள்காதல் கொண்டாள் பின்பாட்டுப் பாடாமை கண்டாள்-என்னைப்
பித்தாக்கி நீங்காத சொத்தாக்கிக் கொண்டாள்
49