பக்கம்:பாடுங்குயில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமாது முன்வந்த காலே-இன் பங்

காணுமல் கூடாமல் வேறென்ன வேலை?

அவளாகத் தான்வந்து மாலை-சூட்டி

அணைப்பாள் தொடுத்தே கொடுப்பேன்ட்ா மாலை

கண்காட்டி விட்டங்குச் செல்வாள்-நானும்

கைகாட்ட என்பால்வந் தேதேதோ சொல்வாள்

பண்காட்டும் பாட்டொன்று சொல்வேன்-இன்னும்

பாடென்று பாடென்று நெஞ்சிற்பு கல்வாள்

நெஞ்ச்ங்கள் ஒன்ருகும் போது-மற்ற

நினைவேதும் இல்லாமல் செல்வேன் விண்மீது

கொஞ்சுங்கள் கொஞ்சுங்கள் என்றே-வஞ்சி

கொண்டாடி மன்ருடிக் கெஞ்சுவாள் நின்றே

என்பாட்டில் இன்பங்கள் கண்டாள்-விஞ்சும்

எழில்கொண்ட பொற்பாவை நீள்காதல் கொண்டாள் பின்பாட்டுப் பாடாமை கண்டாள்-என்னைப்

பித்தாக்கி நீங்காத சொத்தாக்கிக் கொண்டாள்

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/53&oldid=593921" இலிருந்து மீள்விக்கப்பட்டது