பக்கம்:பாடுங்குயில்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்கிறது. தன் மகிழ்ச்சிக்காக உலகம் அவனை மீண்டும் மீண்டும் புலம்ப விட்டுக் கொண்டேயிருக் கிறது. ஆல்ை அவன் மண்ணிற் புதைந்து விட்டாலோ அவனுக்காக உலகம் புலம்புகிறது. அப்புலம்பலை ஒலிபெருக்கி வைத்துப் பரப்பவும் செய்கிறது. நல்ல உலகமடா இது!

போகட்டும்; நாட்டுச் சூழ்நிலை, வீட்டுச்சூழ்நிலை இவற்றின் தாக்குதல்களுக்கு இலக்கான என் மனத்திலும் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றின. உறுத்திக் கொண்டேயிருந்த அந்த உணர்ச்சிகள் நேரம் வாய்க்கும் பொழுது பாடல்களாக வெளிப் LI L_L-GØT •

அப்பாடல்கள் மெல்லிசைப் பாடல்கள். ஆம்; புது முறைப் பாடல்கள். ஆயினும் தாளம் தப்பாதவை; ஒரு கட்டுக் கோப்புக்குள் அடங்கி நடப்பவை. செவி சாய்த்துக் கேட்டுப்பாருங்கள். அவ்வுண்மை புலகுைம்.

கற்பனை வளமும், பொருள் நலமும் செறிய எழுதும் இளைஞர் பலர் இன்று கவிதை உலகிலே உலாவரல் கண்டு மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடு கிறது. ஆயினும் கவிதை என்ற பெயரால் உரை நடைகளை எழுதுவது கண்டு அம்மகிழ்ச்சி வற்றி வறண்டு போய் விடுகிறது. வழி தவறிச்செல்லும் அவர்களுக்கு இந்நூல். நேர்வழி காட்ட உற்ற துணையாகும் என்று நம்புகின்ற்ேன்.

அன்பன் முடியரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/6&oldid=593876" இலிருந்து மீள்விக்கப்பட்டது