பக்கம்:பாடுங்குயில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிக் கொடுத்தவன் சூடக் கொடுத்தனன்

பைந்தமிழ்ப் பா மலரே-உள்ளம்

வாடிக் கிடந்தனன் வாழ் விற் கலங்கினன்

வண்டமிழ்ப் பா வலனே

கூடிக் கிடந்தவர் ஒடிப் பிரிந்தனர்

கொண்டனன் ஓர் கவலை-என்றும்

ஆடித் திரிந்தவன் வாடிப் பொழிந்தனன்

அம்ம! கண் ணிர்த் திவலை -

மட்டித் தனங்களைச் சுட்டுப் பொசுக்கிடும்

மர்வல்லி கொண் டவன்தான்-தன்னைக்

கட்டிப் பிடித்துடல் தொட்டுச் சுவைத்திடும்

காலனை வென் றவன்தான்

எட்டிப் பிடித்தொரு விண்ணை வளைத்ததில்

ஏறிந டந் தவன்தான்-கண்ணிர்

கொட்டிச் சொரிந்திட மண்ணிற் கிடந்திடர்

கூடிக்கி டந் தனனே!

61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/65&oldid=593934" இலிருந்து மீள்விக்கப்பட்டது