இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாடிக் கொடுத்தவன் சூடக் கொடுத்தனன்
பைந்தமிழ்ப் பா மலரே-உள்ளம்
வாடிக் கிடந்தனன் வாழ் விற் கலங்கினன்
வண்டமிழ்ப் பா வலனே
கூடிக் கிடந்தவர் ஒடிப் பிரிந்தனர்
கொண்டனன் ஓர் கவலை-என்றும்
ஆடித் திரிந்தவன் வாடிப் பொழிந்தனன்
அம்ம! கண் ணிர்த் திவலை -
மட்டித் தனங்களைச் சுட்டுப் பொசுக்கிடும்
மர்வல்லி கொண் டவன்தான்-தன்னைக்
கட்டிப் பிடித்துடல் தொட்டுச் சுவைத்திடும்
காலனை வென் றவன்தான்
எட்டிப் பிடித்தொரு விண்ணை வளைத்ததில்
ஏறிந டந் தவன்தான்-கண்ணிர்
கொட்டிச் சொரிந்திட மண்ணிற் கிடந்திடர்
கூடிக்கி டந் தனனே!
61.