இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெண்மை நாணம் பேசில்ை-எங்கள்
பேரும் புகழும் வீசுமோ?
உண்மை கண்டு கூசுவோம்-எங்கள்
உலகம் யாவும் பாசமே
வீனிர் பண்பு செப்பிளுல்-நாங்கள்
விசிறி சேர்ப்ப தெப்படி?
நானம் மானஞ் செப்பினுல்-நாங்கள்
நடிகை யாவ தெப்படி?
கலைகள் கலைகள் என்றெலாம்- சொல்லும்
கதையை நீங்கள் நம்பலாம்
கலையும் ஆடை ஒன்றலால்-வேறு கலையின் சாயல் கண்டிலோம்
கலையின் நுண்மை கற்றுளார்-வாழக்
கையில் என்ன பெற்றுளார்?
உலகம் எங்கள் கையிலே-மக்கள்
உள்ளம் எங்கள் மெய்யிலே
67