பக்கம்:பாடுங்குயில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உலகு في 12 / - 7 م ص 3

என்னை மறந்தேன் உன்னுள் கலந்தேன் எழுந்தது புதுவித உணர்வு-பின்னே எத்தனை எத்தனை கனவு-கண்ணே இதுதான் கவிதை உலகு -

விண்ணில் மிதந்தேன் மண்ணை மறந்தேன் விரிந்தது கற்பனைச் சிறகு-வான வெள்ளிகள் தண்முகில் உறவு-தந்த விளேவே கவிதை உலகு

நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்பில் நனைந்தேன் நிறைந்தது வளர்ந்தது கனவு-இன்பம்

நிகழ்த்திய நாடக நினைவு-தந்த நிழலே கவிதை உலகு

சூழல் துறந்தேன் யாவும் மறந்தேன் சுழன்றது பறந்தது கவலை-அடடா சுரந்தது நெஞ்சினில் உவகை-அந்தச் சுவடே கவிதை உலகு

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/74&oldid=593945" இலிருந்து மீள்விக்கப்பட்டது