இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதை உலகு في 12 / - 7 م ص 3
崇
என்னை மறந்தேன் உன்னுள் கலந்தேன் எழுந்தது புதுவித உணர்வு-பின்னே எத்தனை எத்தனை கனவு-கண்ணே இதுதான் கவிதை உலகு -
விண்ணில் மிதந்தேன் மண்ணை மறந்தேன் விரிந்தது கற்பனைச் சிறகு-வான வெள்ளிகள் தண்முகில் உறவு-தந்த விளேவே கவிதை உலகு
நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்பில் நனைந்தேன் நிறைந்தது வளர்ந்தது கனவு-இன்பம்
நிகழ்த்திய நாடக நினைவு-தந்த நிழலே கவிதை உலகு
சூழல் துறந்தேன் யாவும் மறந்தேன் சுழன்றது பறந்தது கவலை-அடடா சுரந்தது நெஞ்சினில் உவகை-அந்தச் சுவடே கவிதை உலகு
70