இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேன்கூடு
தமிழ்நாட்டு அமைச்சரவை கலேக்கப்பட்ட போது பாடியது ス &.4 ... /* ?έ,
ترتي. **
தென்மலைச் சாரலில் தேன்நிறை கூடு-கட்டத் தேன்சுரும் பாயிரம் பட்டன பாடு பொன்மலை மீதினில் பூமலர்க் காடு-முற்றும் போய்வந்து தேன்மிகத் தேக்கிய வீடு
புன் மனப் பிள்ளையர் கண்டழுக் காறு-கொண்டு பொங்கினர் வீசினர் வீண் மணற் சேறு நன்மன வண்டுகள் கொண்டன வீறு-சென்று நாண் மலர் தேடின நாடொறும் நூறு
ஆயிரம் சூழ்ச்சிகள் செய்தனர் கூடித்-தீயர் ஆடினர் நாடகம் மேடையில் பாடி போயின போயின சூழ்ச்சிகள் ஒடி-மாயப் பொய்ம்மைகள் வீழ்ந்தன வேருடன் வாடி
ஆனிரை மேய்ந்திடும் ஆங்கொரு காடு-தன்னில் ஆடிடும் பெண் மகள் தீங்குயிற் பேடு வானுயர் சாரலில் தேன்விளை கூடு-கண்டு வாயுற வாழ்த்தினள் அன்புளத் தோடு
74