பக்கம்:பாடுங்குயில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழம்பிய உலகம் タc〜e7ール ?クの多

கள்ளர்கள் எல்லாம் வள்ளல்களென் ருல்

கண்ணியம் என்ருெரு சொல்கிடை யாது கொள்ளைக ளெல்லாம் வாணிகம் ஆல்ை

குடியர சென்றிட வாயினி ஏது?

தந்நல மொன்றே வாழ்வெனக் கொண்டோர்

தலைவர்கள் போலே வேடம ணிந்தார்

அந்நிலை ஏதும் அறிகிலர் மாந்தர்

ஆந்தையை மாங்குயில் என்றுநி னைந்தார்.

கோழைக ளெல்லாம் நாடகம் ஆடிக் கூத்திடு கின்ருர் வீரர்கள் போலே

தாழைகள் எல்லாந் தேக்குகள் என்ரும்

தாளங்கள் போட்டதை நம்புவ தாலே.

எருக்கலைப் பூவைத் தெருக்களில் விற்ருல் எத்தனை எத்தனைப் பேர்வரு கின்ருர்!

மருட்கொளி போலே சூடியுங் கொண்டார்

மல்லிகை முல்லையை ஏன் வெறுக் கின்ருர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/82&oldid=593954" இலிருந்து மீள்விக்கப்பட்டது