பக்கம்:பாடுங்குயில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஞ்சிய காமம் மேனியிற் சாயம்

மேவிய தொழிலைக் கலையெனச் சொன் ல்ை அஞ்சிடல் அன்றி ஆறுதல் உண்டோ?

ஆருயிர்ப் பண்புகள் அழிந்திடும் இந்நாள்.

உரைநடை எல்லாம் பாடல்க ளென்ருல்

உயரிய கவிதை நிலைஎன் குைம்?

வரைபட மெல்லாம் ஓவிய மென்றே

வாழ்த்தொலி கூறின் வாழ்கலை சாகும்!

கருச்சிதை வெல்லாம் பிள்ளைக ளென் ருல்

கண்டவர் ஏளனம் செய்திடு வாரே

தெருப்படி யாகித் தேய்ந்திடுங் கல்லைத்

தெய்வமென் ருலதை நம்புவர் யாரே?

போலிக ளெல்லாம் உண்மைகள் என்ருல் பூமியில் நன்மைகள் வாழ்வதும் ஏது?

வேலி க ளெல்லாம் பைம் பயிர் ஆளுல்

விளைநில மென்ருெரு சொல்கிடை யாது.

நல்லது கெட்டது கண்டறி யாது

நடந்திடும் செம்மறி யாடுகள் போலே

செல்கிற மாந்தர் சேரிடம் எங்கோ?

சிந்தைகள் யாவுங் குழம்பினர் அந்தோ:

To 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/83&oldid=593955" இலிருந்து மீள்விக்கப்பட்டது