பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 95 யமுதில் பாடி யிருக்கின்றர். இவருடைய பாடல்கள் பல திரைப்படங்களிலே முழங்கிவருகின்றன. பாண்டியன் பரிசு என்பது முழுதும் விருத்தப் பாக்களால் ஆன சிறந்த காப்பிய நூல். இக் காப் பியத்தில் வீரம், நகை முதலிய சுவைகள் நிறைந் திருக்கும் ; நிலையாமையைப்பற்றிச் சொல்லும் பகுதி சிறப்பாக இருக்கும் , மூடநம்பிக்கைகளை அழகாக நகைச்சுவையுடன் எடுத்துக் கூறும் பகுதி யைப் படித்துப்படித்து மகிழலாம். ،يجي ىrه ئي چيrrg ده ாச் இவை தவிர வேறு காப்பியங்கள், நாடகங்கள். பாடல்கள், உரைநடை நூல்கள் முதலியவற்றையும் பாரதிதாசன் எழுதியுள்ளார். இவ்வாறு உயர்ந்த நூல்களை எழுதித் தமிழ்மொழிக் காவலராய்ப் பாட்டுலகில் முடிசூடா மன்னராய் விளங்கி வந்த பாரதிதாசனை, மக்கள் பாவேந்தர்' என்னும் பெயரிட்டழைக்காமல், வேறு எப்பெயரால் அழைப்பர் ? உ. உளப்பாங்கு குழந்தை நெஞ்சம் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர். அவருடன் பழகியவர் இதனை நன்கு அறிவர். இவர் பிறவிக் கவிஞராக இருந்தமையால், குழந்தை உள்ளம் படைத்தவராக விளங்கினர். உலகியலுக்கும் இவருக்கும் நீண்ட இடைவெளி யிருக்கும். யார் எதைச் சொன்னலும் இவர்