பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாடுங் குயில்கள் பெற்றுக்கொண்டார். வாதி விடைபெற்றுச் சென்ருன். மறுநாள் நீதிமன்றம் தொடங்கியது. வாதி மகிழ்ச்சியுடன் வந்திருந்தான். நீதிபதி பேசத் தொ ட ங் கி ைர். அனைவரும் இவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் உண்மையைக் கண்டுபிடிப்பது உள்ள படியே எனக்குக் கடினமாகத்தான் இருந்தது. நேற்றிரவு வாதி என் விட்டிற்கு வந்து இலஞ்சம் கொடுத்தபோதுதான் எனக்கு உண்மை வெளிப் படையாகத் தெரிந்தது என்று கூறி, வாதி முதல் நாள் தம்மிடம் தந்த பணத்தையும் வேதநாயகர் எடுத்துக் காட்டினர். அப்போது நீதி மன்றமே நடுங்கிவிட்டது. ஆகவே, நீதியை எதிரிக்கும், மன்னிப்பை வாதிக்கும் அளிக்கின்றேன்’ என்று இவர் திர்ப்பு வழங்கி, அந்தப் பணத்தை எதிரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினர். இத் தீர்ப்பு நகர் முழுமையும் பரவியது. நீதிநாயகராகிய வேதநாயகரின் புகழும் எங்கும் பரவியது. நீதிநூல் படைத்தல் வேதநாயகர் மக்களிடம் காணப்படுகின்ற குற்றங்குறைகளைக் கான நேர்ந்தபோ தெல்லாம் மனம் வருந்துவார். மக்கள் இவ்வாறு தீய வழிகளிற் சென்று மடிகின்றனரே இவர்களை எவ்வாறு நல்வழியில் திருப்புவது ? என்று அடிக்கடி சிந்தனை செய்துகொண்டேயிருப்பார். கவிஞருடைய சிந்தனை வெளிப்படுமானல், அது கவிதை வடிவிலே