பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 19 விடுபட்டதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை : அடிமைத்தளை அறுபட்டதாகவே கருதினர். அத னைப்பற்றி இவர் பாடியிருக்கும் பாடலே அதற்குச் சான்று பகரும் : "நீடும் எண் சாண்மெய்யை ஒர்சாண் உதரம் நிமித் தம்விற்று நாடும் அரசர் அடிமை என் றே முன்பு நாம் கொடுத்த ஏடு கிழிபட்ட தன்ருே உத் யோகம் இழந்ததுவே" என்று வேதநாயகர் அடிமைச் சீட்டுக் கிழிந்து போய்விட்டதாகவே கருதி மகிழ்ந்து பாடுகிரு.ர். வேதநாயகர் ஒய்வு பெற்ற பின்பு, மாயூர நகராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அவ்வூர் மக்கள் இவருடைய உயர்ந்த பண்புகளையெல்லாம் நன்குனர்ந்த காரணத்தால், பெருமக்கள் பலர் கூடி வேதநாயகரைத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தனர். அப் பெருமக்களின் முயற்சியால் வேத நாயகர் நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ருர், தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர் மக்களுக்குத் தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிட்டியது என்று அதனைக் கருதினர் ; பொறுப்போடு கடமையாற்றிஞர் ; நகருக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து, மக்கள் பாராட்டிப் புகழுமாறு நடந்துவந்தார்.