பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 33 கொண்டிருந்தபொழுதே தம்பிரானிடம் கவிமணி தமிழையும் நன்கு கற்றுவந்தார். தொடக்கப் பள்ளியில் படிப்பு முடிந்ததும் இவர் கோட்டாற்று ஆங்கிலப் புள்ளியில் சேர்ந்து படித்துவரலாஞர். இவர் தம் பத்தாம் வயதில் தந்தையாரை இழந்துவிட்டார்; அதல்ை தாயாரின் மேற்பார்வையில் வளர்ந்துவந்தார். ஆங்கி ல ப் பள்ளியில் இவர் பயின்று வந்தபோதும், தம்பிரா னிடம் சென்று தமிழ் கற்கத் தவறியதில்லை. அதனல், இவர் இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் திகழ்ந்தார். பாடல்கள். வரலாற்றுக் குறிப்புகள் என்ருல் இவர்க்குத் தனி விருப்பம் அப்பொழுதே இருந்துவந்தது. இவர் ஐந்தாண்டுகள் தமிழ் கற்றுச் சிறந்த புலமையும் பெற்ருர். இளமைப் பருவத்திலேயே பாடல்கள் இயற்றும் ஆற்றலும் இவரிடம் அமைந்திருந்தது. சாந்தலிங்கத் தம்பிரானுக்குப் பிறகு, அம் மடத் தின் தலைவராகச் சங்கரலிங்கத் தம்பிரான் என்பவர் வந்துசேர்ந்தார். அவரிடத்தும் கவிமணி தொடர்பு கொண்டிருந்தார். புதிய தம்பிரான் கவிமணியின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைவார்; நீ எதிர்காலத்தில் பெருமையுடன் விளங்குவாய் ' என்று வாழ்த்துக் கூறுவார். கவிதைப் பயிற்சி ஒரு நாள் கவிமணியும் அவருடன் பயின்றவர் களும் மடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது தம்பிரானுக்கு அருகில் அப்பம், வடை முதலிய தின்