பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 43 இயற்றுவார். மொழிபெயர்ப்பு என்ற நினைவே தோன்ருமல், தமிழ் மூலத்தைப் படிப்பதுபோலவே இருக்குமாறு மொழிபெயர்ப்புப் பாடல் இயற்று ன்ெற இவருடைய பேராற்றலைச் சான்ருேர் புகழ்ந் துரைக்கின்றனர். இந் நூல் புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது; உள்ளத்தை உருக்க வல்லது; கடவுள் பேரால் உயிர்ப்பலி கூடாது என்று கூறுவது. உமார் கயாம் பாடல்களும் மொழிபெயர்ப்பு நூலே. பாரசீகத்தில் பிறந்த கவிஞர் உமார் கயாம்; அவருடைய பாடல்களைப் புதுப் பொலிவுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிருர் கவி மணி. இப் பாடல்கள் இனிமைவாய்ந்தன; பொருள் மிக்கன. இப் பாடல்களைப் படிப்பவர்க்கு, வேறு உல கத்தில் இருப்பதுபோன்ற ஓர் உணர்வு தோன்றும். நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்னும் கவிதை நூல் நகைச்சுவை நிரம்பியது. நாஞ்சில் நாட்டில் ஒரு வேடிக்கையான வழக்கம் முன்பு இருந்துவந்தது. ஒருவருடைய சொத்து அவருடைய மக்களுக்கு உரிமையாகாது; அவர்தம் சகோதரி மக்களுக்கே, அஃதாவது மருமக்களுக்கே உரிமை யாகும். இதற்கு மருமக்கள் தாயம்’ என்பது பெயர். இவ் வழக்கத்தால் பல கேடுகள் நிகழ்ந்தன. இம் முறையைக் கண்டிக்கும் வகையில் நகைச்சுவை பொருந்த இவரால் எழுதப்பெற்ற நூல் இது. தேவியின் தீர்த்தனங்கள் கவிமணி தமிழிசைக்குச் செய்த தொண்டாகும். தேசிக என்பதிலுள்ள