பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாடுங் குயில்கள் முதலெழுத்தையும் விநாயகம் என்பதிலுள்ள முதலெழுத்தையும் சேர்த்துத் தேவி என்று கொண்டு, தேவியின் கீர்த்தனங்கள்’ என்னும் பெயர் வைக்கப்பெற்றுள்ளது. பத்திச் சுவை: நிறைந்த நூல் இது. உரைநடை நூல்கள் கவிமணியின் உரை.மணிகள் என்பது இவருடைய உரைநடைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். காந்தளூர்ச் சாலை’ என்பது சிறந்த ஒர் ஆராய்ச்சி நூல். - கவிதைப் பண்பு - இவருடைய பாடல்கள் எளிய சொற்களால் ஆனவை; இனிமை நிறைந்தவை; படித்தாலும் கேட்டாலும் மனத்தை உருக்குபவை. அருஞ்சொற். களைக்கொண்ட பாடல்களையும் இவர் இயற்றி யுள்ளார். எனினும் சிறுவர் சிறுமியரை மனத்தில் வைத்துக்கொண்டு பாடியதாலும், அவர்களுக் காகப் பாடுவதையே குறிக்கோளாகக்கொண்டமை. யாலும் எளிய சொற்களைக்கொண்டே இவர், பாடல்களை இயற்றினர். ஆயினும் உயர்ந்த கருத் துகளை அந்தப் பாடல்கள் உணர்த்தும். சிறுவர்க் கான பாடல்களைப் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி இன்புறுவர். 'ரசிகமணி என்னும் சிறப் பினைப் பெற்ற டி. கே. சிதம்பர்நாத முதலியார், கவிமணியின் பாடலைப் பாடிப்பாடி உருகுவார்: நம்மையும் உருகவைப்பார். - |