பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 51 விடுவார். என்ருலும் அன்பை வெல்ல முடியுமா ? அன்புக்காகக் கட்டுப்பட்டுத் தவிர்க்க முடியாமல் சில பாராட்டுகளை இவர் ஏற்றுக்கொண்டார். கவிமணி முதன்முதலாகக் கவிஞர் பெருமான் தேசிக விநாயகத்தைப் பாராட்டிய பெருமை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தையே சாரும் . ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு, டிசம்பர் மாதம், இருபத்து நான்காம் நாள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவுக்குத் தலைமை தாங்கியவர். தமிழவேள் உமாமகேசுவரனுர் ஆவர். அவர் தேசிகவிநாயகத்தின் அருமை பெருமை களையும் கவிதைச் சிறப்பையும் பாராட்டிப் பேசிக் கவிமணி’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினர். அன்றுமுதல் இவருடைய இயற்பெயர் சுருங்கிக் கவிமணி என்னும் பெயரே மேலோங் கியது. கவிமணி என்று பாராட்டப்பெற்ற இந்த மணிக்குயில், இனிய கீதங்களைப் பாடிப்பாடி நம்மை மகிழ்வித்துக்கொண்டேயிருந்தது. கவிமணி எவ்வளவுக் கெவ்வளவு புகழை வெறுத்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு புகழ் இவரை விரும்பியது. கவிமணிப் பட்டம் பெற்ற பிறகு நாளுக்கு நாள் இவர்தம் புகழ் வளரலாயிற்று. கவி மணியின் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த பாராட்டு என்று சொன்னல், அஃது ஆத்தங்குடியில் நடந்த பாராட்டாகத்தான் இருக்க முடியும்.