பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாடுங் குயில்கள் வணங்கப்பட்டது. புனிதத்தன்மை வாய்ந்த அக் காவிரிக்கரையில் திரிசிரபுரம் என்னும் திருச்சிராப் பள்ளி அமைந்திருக்கின்றது. இப் பேரூருக்குத் தெற்கே பத்துக்கல் (16 கி. மீட்டர்) தொலைவில் குளத்துார் என்னும் சிற்றுார் உளது. குளத்துரில் வேளாளர் குடும்பங்கள் பல இருந்தன. அவற்றுள் கொங்குராயர் குடி என்ற அரசியல் சிறப்புப்பெற்ற குடும்பம் ஒன்றும் வாழ்ந்தது. அக் குடியில் தோன்றிய மதுரநாயகம் பிள்ளை என்பவர் தமது ஐம்பதாவது வயதில் கிருத்துவ சமயத்தில் சேர்ந்தார். இவருக்குச் சவரிமுத்துப் பிள்ளை என்னும் பெயருடைய பேரர் ஒருவர் இருந்தார். கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மரிய சவரியாப் பிள்ளை என்ற மருத்துவர் ஒருவர் குளத்துாருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஆரோக்கிய மரி உம்மாள் என்ற திருமகளார் இருந்தார். இவ் வம்மையாருக்கும் சவரிமுத்துப் பிள்ளைக்கும் சிறப் புடன் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்வு அறநெறி தவருது நடைபெற்று வந்தபொழுது, அவ்விருவர்க்கும் திருமகளுராகக் கி. பி. 1826ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிளுேராம் நாள் வேத நாயகர் தோன்றினர். தொடக்கக் கல்வி குழந்தை செல்வச் சிறப்புடன் வளர்க்கப் பெற்றது. நாளொரு மேனியும் பொழுதொரு