பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 3 வண்ணமுமாக வ ள ர் ந் து வந்த வேதநாயகர் குழந்தைப் பருவத்தில் பெற்றேரிடம் ஆடல், பாடல், கதை முதலியன கற்றுவந்தார். வேதநாயகர் குழந்தைப் பருவத்திலேயே கூர்மையான அறிவு படைத்தவராகக் கானப் பட்டார். பள்ளிப் பருவம் அடைந்ததும், பெற்ருேர் இவரைப் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். அக் காலத்தில் சிற்றுார்களில் தெருப் பள்ளி அல்லது திண்ணைப் பள்ளி என்று வழங்கும் பள்ளிகளே இருந்தன. அங்கேதான் கல்வி தொடங்கப்பெறும். இந்தப் பள்ளிகள் ஆசிரியர் வீட்டுத் திண்ணை களிலே நடைபெறும். குளத்துாரில் இப்படிப் பட்ட தெருப் பள்ளியொன்றில் வேதநாயகரும் சேர்க்கப்பட்டார். பத்து வயது வரை அங்கேயே பயின்ற இவர், நன்மாளுக்கர் என்று ஆசிரியராலும் பிறராலும் பாராட்டப் பெற்ருர். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக் கேற்பக் கல்வியாற்றல், நல்லொழுக்கம் முதலியன இளமைப் பருவத்திலேயே இவரிடம் அரும்புவிடத் தொடங்கின. உயர்நிலைக் கல்வி திண்னைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற வேத நாயகர்க்கு, உயர்நிலைக் கல்வி கற்பிக்க விரும்பினர் தந்தையார். ஆளுல், அக் கல்வி கற்கத் திரிசிரபுரத் திற்குத்தான் செல்ல வேண்டும். ஆங்கில ஆட்சி யிருந்த அந் நாளில் தமிழ் மாநிலம் இரண்டு