பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புரட்சிக்குயில் பாரதிதாசன் (கி. பி. 1891 - 1964) தமிழுக்கும் அமுதென்று பேர் :-அந்தத் தமிழ்இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ! இந்த அமுதப் பாடலேக் கேளாச் செவிகளே இல்லை என்று துணிந்து கூறலாம். பாடிப்பாடிச் சுவை கானும் வாய்கள்தாம் எத்தனை எத்தனே ! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்னும் வெற்றிச் சங்கின் வீரமுழக்கத்தையும் மேடைதோறும் கேட்டுக்கேட்டு, உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட நெஞ்சங்களைத்தாம் கணக் கிட்டுச் சொல்லமுடியுமா ? பாடல்கள் நன்ருகத் தெரியும் ; ஆனால் அந்தப் பாடல்களைத் தந்த மாபெருங் கவிஞர் யார் ? எத்தனை மாணவர் அறிவர் ? இன்று தமிழ் நாடெங்கனும் பாட்டரங்கங்கள் சிறந்த முறையில் நிகழ்ந்துவருவதை, நாளெல்லாம் கண்டு களிக்கின்ருேம், அந்த அரங்கங்களில் பாமழை பொழிகின்ற பாவலரின் எண்ணிக்கையை அளவிட்டுச் சொல்ல முடியாது. அந்தப் பாவலர் களுக்குப் பாட்டு வெறி ஊட்டியவர் யார் ? ஒரு பெரும் பாவலர் பரம்பரையே உருவாவதற்கு. காரணராக - வழிகாட்டியாக நின்ற பாவ : யார் ? அவர்தாம் பாவேந்தர் பாரதிதாசன்