பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HI) படுங் குயில்கள் தமிழர்கம் நெஞ்சமெல்லாம் தளிர்த்து வளரத் கமி|முதம் வார்த்து, தமக்கென ஒரு பரம் பரையைத் தோற்றுவித்து, எழுச்சிப் படைவீரர் களாக ஆக்கிவிட்ட இப் பெரும் பேராசானை இளைய பாரதம் அறியாமல் இருக்கலாமா? பாவலர் பரம்பரை தோன்றவேண்டும் என்று கனவு கண்டவர் விடுதலைக் குயிலாகிய சுப்பிரமணிய பாரதியார். அக் கனவை நனவாக்கிய பெருமை பாட்டுலகத் தந்தை பாரதிதாசனையே சாரும். - அ. கனக சுப்புரத்தினம் இளமையும் கல்வியும் கிழக்குக் கடற்கரையோரத்திலே, புதுச்சேரி என்னும் ஒர் அழகிய நகரம் இருக்கிறது. அந் நகரில், கனகசபை என்பவர் பெரும் வணிகராக விளங்கி வந்தார். மகாலட்சுமிஅம்மையார் அவருக்கு வாழ்க் கைத் துனேவியாக வாய்க்கப்பெற்ருர். கி. பி. 1891 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் நாள், இவர் களுக்கு ஒர் ஆண்மகவு பிறந்தது. இவர்கள் சீரும் சிறப்புமாய் அம் மகவை வளர்த்து வந்தனர். அக் குழந்தைக்குச் சுப்புரத்தினம் என்னும் பெயரிட்டு த் தக்க பருவத்தில் பள்ளியில் சேர்த்தனர். சுப்பு ரத்தினம் இளமையிலேயே பாடலில் நாட்டம் உடையவராக இருந்தார் , இயற்கை யழகுகளைக் கண்டு மகிழ்வதில் பெருவிருப்பங் காட்டிஞர் ; ՀեմԶ Յrմ:: ப்பும் துடிதுடிப் பும் 22. TUYŁ – பவராகத் தோன்றினுர்.