பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 85 சுப்புரத்தினத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பாரதியார் அங்கு வந்திருப்பதை அறிந்த சுப்புரத்தினம் நேரிற் சென்று அவரைக் கண்டார். அன்றே பாரதியாருக்கு, இவர்மீது ஒரு நல்லெண்ணம் உண்டாகிவிட்டது. அன்று முதல் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பாரதியாரின் பாராட்டு நாளுக்குநாள் அத் தொடர்பு வளர்ந்துவந்தது. ஒருநாள் நண்பர் சிலருடன் பாரதியார் உரை யாடிக்கொண்டிருந்தார்: அ ப் பொழுது சுப்பு ரத்தினமும் அங்கிருந்தார். நண்பர்களிடத்தில் சுப்பு ரத்தினத்தைப் பற்றிப் பாரதியார் கூறினர், சுப்பு ரத்தினம் பாடல்கள் எழுத வல்லவன்’ என்று வியந்து கூறி, ஒரு பாட்டும் எழுதப் பணித்தார். உடனே சுப்புரத்தினம், எங்கெங்குக் கானினும் சக்தியடா!-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா !” என்று தொடங்கும் பாடலைப் பாடிக் காட்டினர். பாடலைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சுப்புரத்தினத்தின் பாட்டுத் திறத்தையும், எழுச்சி மனப்பான்மையையும் அறிந்துகொண்ட பாரதி யார் இவரைத் தமக்கு உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடலேப் பாரதியாரே சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார்; அனுப்பியபோது, பூரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்று தாமே அதில் எழுதி அனுப்பினர்.