பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாடுங் குயில்கள் ஈ. பாவேந்தர் விருத்தப்பாவலர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வெண்பா, ஆசிரியப்பா முதலான எல்லாவகைப் பாக்களேயும் பாட வல்லவர்; ஆயினும், விருத்தப்பா என்னும் பாடல் எழுதுவதில் ஆற்றல்மிக்கவராக விளங்கினர். வெண்பாப் பாடுவதில் புகழேந்திப் புலவர் எவ்வாறு வல்லவராக விளங்கிளுரோ. அவ்வாறே விருத்தம் பாடுவதில் கம்பர் முன்பு வல்லவராக விளங்கினர். கம்பருக்குப் பிறகு, விருத்தப்பாவிற்குப் புத்துயிரும் பெரு மதிப் பும் உண்டாகச் செய்தவர்களுள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். புரட்சிக் கவிஞர் கவிதை நூல்கள், உரைநடை நூல்கள், நாடக நூல்கள் எனப் பலப்பல எழுதித் தந்துள்ளார். கம்பருடைய கவித்திறனையும் அவிச் இறப்பையும் கண்டு வியந்தவர்கள், அவரைக் கவிச் சக்கரவர்த்தி என்று வழங்கினர். அதைப்போலவே புரட்சிக் கவிஞருடைய பாட்டு வன்மையையும் பாடற் சிறப்பையும் உணர்ந்த மக்கள், இவரைப் * பாவேந்தர் என்று வழங்கத் தொடங்கினர். புரட்சிக் கவிஞர் பாவேந்தராஞர். படைப்புகள் பாவேந்தர் நமக்குப் படைத்தளித்த நூல்கள் பல. அவற்றுள் பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, தமிழியக்கம், அழகின் சிரிப்பு, இசையமுது, பாண்டியன் பரிசு ஆகிய நூல்கள் மிகச் சிறந்தன வாகும.