பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 93 பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் பல் வேறு சமயங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுதி. இந்த நூலே, பாரதிதாசன் ஒரு பெருங் கவிஞர் என்பதைத் தமிழ்நாட்டிற்கு உணர்த் திற்று. இவருடைய பாடல்கள் மேலும் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. குடும்ப விளக்கு என்பது ஒவ்வொரு குடும் பத்துக்கும் விளக்குப்போன்ற நூல். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்னுங் கருத்தை அடிப்படை யாக வைத்து எழுதப்பட்ட நூல் இது. குடும்பம் எப்படி நடத்தவேண்டும் என்று, குடும்பத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஒர் ஆசான் போன்றது இந்த நூல். ஒவ்வொருவரும் தவருமல் படித்துணரவேண்டிய நூல். பாரதி தாசன் படைப்புகளுள் இது புதுமையான படைப் பாகும்; தனித் தன்மை வாய்ந்ததும் ஆகும். தமிழியக்கம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி எந் தெந்தத் துறைகளில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது, எங்கெங்கு நம் மொழி தலைமை பெறவேண்டும், தமிழ் தலைமை பெற யார்யார் என்னென்ன பணி களில் ஈடுபடவேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, ஒர் இயக்கம்போல நின்று வழிகாட்டும் ஒப்பற்ற நூல் இது. தமிழ்நாட்டு இளைஞர் ஒவ் வொருவரும் இதனைப் படித்து உணர்ந்து, நெஞ்சில் பதியவைத்து, அஃது எடுத்துக் கூறும் நெறிமுறை களைச் செயற்படுத்தினால், தமிழ்மொழி தனக்குரிய நிலையையும் மேன்மையையும் அடைந்தே தீரும். பா. கு.-7