பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மக்கட்கும் நமதருமை மகவுக்கும் இராவணனின் மிகு
மிக்கபுகழ்ப் பெயர்வைப்போம்; விழாவெடுப்போம்; அறிவு
தக்கோரை அழைத்திங்கே தமிழ்வளர்ப்போம்; அதுவே நம்
அக்கறையாம்; தன்மானம் அரசோச்சும்; வாழ்வோமே!

(அறுசீர் விருத்தம்)


இதுவரை எனது பாடல்
        என தரும் கவிஞர் பாடல்
புதியன கூறக் கேட்டுப்
        பூரித்தீர்; புதுவை மக்காள்!
வதுவையில் மகிழும் நல்ல
        மணமக்கள் போல என்றும்
புதுமையை ஏற்றீர்! நன்றி!

        பொலிவுடன் வாழ்க நீடே!

நாள்: 6-6-1971 ஞாயிறு காலை 8-30 மணி.

இடம்: நகர மன்ற அரங்கம் (ஒதியஞ்சாலை), புதுவை. இராவணன் விழாக் கவியரங்கம்.

தலைவர்: கவிஞரேறு வாணிதாசன்

தலைப்பு: ‘உள்ளந் திறந்து பேசட்டும்.’

1. காழ்—முளை;