பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வேங்கடப் பெருமை

இனிய தாயகத் தலைமை வேங்கடம்!8
இந்த வள்ளுவர்க் கெடுக்கும் விழாவில்
இருக்கும் மக்களின் தலைமை வேங்கடம்!
இந்த நாட்டின் அரசில் வாழ்ந்தே
இருக்கும் மக்களின் தலைமை வேங்கடம்!
அந்த வேங்கடத் தலைமைக் கெனதே
அகங்கனிந்த வணக்கம் முதற்றாம்

இந்த மன்றினில் இருக்கும் மேலோர்,
இங்குச் சூழ்ந்த தந்தை தாய்மார்,
வந்து பாட வல்ல கவிஞர்,
வாழ்த்தும் மாநகர்த் தந்தையர்,9
மற்றும் யாவர்க்கும் வணக்கம்! வணக்கமே!

தலைவர் முடிவுரை : வாழ்த்து
(வெண்பா)


எண்10ணிரட்டிப் பாடினார்; நால்வரிலை! கேட்டோம் நாம்!
பண்ணுருட்டி மேலோர் பலாச்சுவைத்தோம்!11 மண்ணில்
இளங்கவிஞர் வாழ்க! இது போன்ற நல்ல

வளக்கவிதை பாடுக வாய்!

நாள் : 27-2-1966.

இடம் : பாகூர்ச் சிவன் கோயில் - வள்ளுவர் விழா.

விழாத் தலைவர் : புதுவை மாநில முதலமைச்சர் மாண்பு மிகு திரு. வி. வேங்கட சுப்பாரெட்டியார்.

கவியரங்கத் தலைவர் : புதுமைக் கவிஞர் வாணிதாசன்.