பக்கம்:பாட்டுத் திறன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 149 கின்றது. அவன் தான் கருதிய பொருளையே கூறினன்; ஆனால், அப்பொருள் எல்லையின்றி விரிந்து அமைவது உணரப்படு கின்றது. அப்பொருள் உணர்த்துவது கமது கற்பனைக்கு கிறைவு தருவதோடு நமது முழுமைக்கும் கிறைவு தருகின்றது. நம் உ ள் ளு ம் பு ற ம் பு ம் உள்ள ஒன்று. ஒரு கனவின் சிதைவுகளை ஒன்றுபடுத்துமாப்போல் காணப்படுகின்றது; அவ்வொன்றின் ஒரு பகுதி கனவுலகில் காணப்படுவதாக ஆகின்றது; பிறிதொன்று உள்ளக் கிடக்கையிலேயே துடித்த கிலையில் அமைகின்றது. இதனால்தான் மேற் குறிப்பிட்ட திருப்பாவையின் பாசுரத்திற்குப் பல வியாக்கியானங்கள் எழுந்தன. மேற்கூறியவாறு எண்ணத்தில் நடைபெறுகின்றவற்றைத் திருப்தியான முறையில் படத்தால் விளக்குவது கடினம். அச் சிட்ட சொல்லின் பார்வைத் தூண்டலிலிருந்து வரும் உள் துடிப்பு மூளையில் ஏதோ ஒரு மண்டலத்தை அடைவதாகக் கருதப் பெறுதல் வேண்டும்; அங்கு இந்தத் தூண்டலினா லன்றி கடந்த நிகழ்ச்சிகளினால் ஏற்பட்ட ஏனைய துண்டல் களுடன் சேர்ந்ததனாலும் சில விளைவுகள் நேரிடுகின்றன. இந்த விளைவுகளே எண்ணங்கள்; அவை தம்மோடு தாமாகக் கலந்து தொகுதிகளாகிப் பிற எண்ணங்களுக்கு அடையாளங் களாக அமைகின்றன. படத்திலுள்ள (படம் - 8; பக்கம் #5) சிறிய அம்புக்குறிகள் மனத்திற்குப் புறம்பே யுள்ள பொருள் களுக்குக் குறியீடுகளாகக் காட்டப்பெற்றுள்ளன. ஐந்தாம் கிலை : கவிதையிலுள்ள காட்சியை மனக் கண்ணால் கண்டதாலும், அந்தக் காட்சியைக் காட்டிய பாடலின் ஒலிநயத்தாலும் உள்ளத்தில் ஏற்படும் உள்ளக்கிளர்ச்சி. உணர்ச்சி: அல்லது உள்ளக்கிளர்ச்சி: என்பது இயற்கை யைப் புரிந்து கொள்ளக்கூடிய வேறோர் எதிரான முறையன்று என்பதை மேலே வலியுறுத்தினோம். உணர்ச்சி அல்லது உள்ளக் கிளர்ச்சி ஏதாவது ஒரு பொருளைச் சுட்டுமாயின், அஃது அதன் மூலத்தினூடே வருணிக்கப்பெற்ற முறையிலேயே ஏற்படு கின்றது. உண்மையில் உணர்ச்சிகள் என்பவை அடையாளங் 82. -sari 35 - Feeling. 88. a-starāśario - Emotion.