பக்கம்:பாட்டுத் திறன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 9 கற்பனை கற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டு வந்து அப்பொருளினிடத்து மீண்டும் அநுபவத்தை ஏற்றவல்ல ஒருவகை யாற்றல் கவிதைத்திறன் கவிதைகளைக் கனிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்த வல்லது. கவிதைகளின் பிறபண்புகளுக்கெல்லாம் அடிநிலமாக அமைவது இதுதான்; முடியாக இருப்பதுவும் இதுவே. கற்பனை யைப்பற்றி முடிந்த முடிபாக இதுகாறும் ஒருவரும் வரையறுத்துக் கூறவில்லை; கூறமுடியும் என்றும் நமக்குத் தோன்றவில்லை. கற்பனையாற்றல் இன்னது என்பதைச் சொற்களால் எல்லை கட்டிக் காட்ட இயவாது. கற்பனையாற்றல்' என்ற ஒரு சொற்றொடரைக் கொண்டே மனத்தில் தோன்றும் பல்வேறு நிலைகளையும் குறிக்கின்றோம். ரஸ்கின்' என்ற மேனாட்டுத் திறனாய்வாளர் கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது; சொற்களால் உணர்த்தமுடியாதது; அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அஃது அறியப்பெறுவதொன்றாகும்' என்று குறிப்பிடுவர். மேலே கூறிய கருத்துக்களைச் சில எடுத்துக்காட்டுகளால் விளக்குவோம். தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? என்ற அடிகள் காலைக் கதிரவனை வருணிக்கும் பாரதியாரின் அற்புதச் சொல்லோவியம். இளஞ் சூரியனின் கதிர்கள் உருக்கி 1. E siost sir-Ruskin 2. “The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effect only”—Ruskin ஆ. பாரதியார்-குயில்-வரி 81-82 . . . . .