பக்கம்:பாட்டுத் திறன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_rుద్ధాజ్ఞః ప్రాణాశ్ 12^4 కాగ 351 கம்பனுக்குப் பின்னர்த் தோன்றிய பல கவிஞர்கள் இப்பண் பினைப் போற்ற மறந்துவிட்டனர். ஆனால், இப்பண்பினுக்கு ஒரு முத்தாய்ப்பு வைப்பது போல, காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் காமன்றி வேறில்லை நோக்க கோக்கக் களி யாட்டம்' என்று பாரதியார் போற்றியுள்ளார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் பாடல்களிலும் இப்பண்பு போற்றிக் காக்கப் பெற்றுள்ளது." உயர்வு நவிற்சி : ஒரு பொருளை அதன் தன்மையினும் மிகுத்துக் கூறுவது உயர்வுநவிற்சி யணியாகும். அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை மணலொன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே." கவிஞர் சயங்கொண்டார் பாலை கிலத்தின் வெம்மையினை இவ்வாறு கூறுவர்: சிறையிருந்த செல்வியை மீட்பர்ன் வேண்டி இராமன் பொருட்டுக் கடலுக்கு அணையிடப் புகுந்த குரங்கினங் கள் மலைகளைச் சுமந்து வீணான தொல்லைகளை மேற் கொண் டனவே; இப் பாலை விலத்தின் மணல் ஒன்றினைக் கடலில் இட்டாலே போதுமே, கடல் முழுதும் வறண்டிருக்க அறிவற்ற குரங்குகள்!' என்பது சயங்கொண்டாரின் பாலைவில் விளக்கம். ஒரு மணல் கடல் நீர் முழுவதையும் சுவற அடித்து விடும் என்று கூறுவதால், பாலையின் வெம்மையை அதன் தன்மையினும் மிகுத்துக் கூறுகின்றார் என்பது உயத்துணரத் தக்கது. மண்டலங் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட எண்டிசை சுமந்த மாவுக் தேவரும் இரியல் போகத் 19. பாதியார் கவிதைகள்-ஜயபேசிகை. * * * 20. மலரும் மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பில் இயற்கை இன்பம்" உள்ளமும் உணர்வும்’ என்ற தலைப்புக்களின் ழ்ெ உள்ள கவிதைகளைக் காண்க. 31. கலிங்கத்துப்பரணி - தாழிசை.96,