பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாட்டும் தொகையும்

குடங்களும் எதிர்காலத்தின் கொடுமையை விளக்கி நிற்கின்றன.

இனி அந்தப்புரத்துக் காட்சியைக் காணலாம். அரண்மனையின் அந்தப்புரக்கட்டடங்கள் மலைகள் போல் உயர்ந்து தோன்றுகின்றன. அந்தப்புரத்தின் மேல் பல வண்ணக்கொடிகள் பறக்கின்றன. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலின்மேல் தலை வனின் பிரிவுத் துன் பத்தால் வாடி மெலிந்த தலைவி, ஒளி யிழந்த முகத்து. என் காலைப்படுகின்றாள். மார்பிலே மங்கலநாண் ஒன்று மட்டுமே காணப்படுகின்றது. அழகிய முன் நெற்றியில் சில தலைமயிர்க்கற்றைகள் ஒழுங்கு செய்யப்படாமல் உலறிக்கிடக்கின்றன. மகரக் குழைகள் காதுகளிலிருந்து கழற்றிவைக்கப்பட்டிருப்பதால் காதுகள் சிறிதே தாழ்ந்துள்ளன. பொன் வளைகள் ஒலித்த முன்கை களில் இப்போது சங்கு வளையல்கள் காணப்படுகின்றன. ஒரே ஒரு விரலில் மட்டும் மோதிரம் ஒன்று காணப்படு கின்றது. உயர்ந்த பூந்துகிலை இயல்பாக உடுத்தியிருந்த தவைவியின் உடலில் இப்போது நூற்புடவையே காணப் படுகின்றது. இத் தோற்றத்தில் அவள் வண்ணங்களைக் கொண் டெழுதாத புனையா ஒவிய மாகக் காட்சி தருகிறாள்.

பாசறையில் அரசன் கடமையே கண்ணாக இருக்கி றான். தீப்ப்ந்த வெளிச்சத்தில் சென்று புண்பட்ட வீரர் களுக்கு ஆறுதல் சொல்கிறான். அப்போது மழைபெய்ய, மழைத்துளிகள் மன்னனின் மேல் தெறிக்கின்றன. அரசன் தோளிலே அணிசெய்யும் அழகிய துகில் வாடைக்காற்றால் நழுவுகின்றது. அதனை இடப்பக்கத்தில் அனைத்துப் பிடித்துக்கொள்கிறான். நள்ளிரவிலும் உறக்கங் கொள் ளாமல் அரசன் பாடி வீட்டில் பவனி வருகிறான்.

வேம்புதலை யாத்த நோன்காழ் எ.கமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்.