பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பெண்ணுே? 'பெண்ணுே? பேரெழிற் பேழையோ?-நெஞ்சே! கண்களால் இதற்குமுன் கண்டாரே இல்லையே! வண்ணமலர்க் காட்டுப் பூக்கள் இனந்தானே? வார்த்தெடுத்த பைம்பொன் அழகுச் சிலைதானே! சித்திர மாடத்துச் சிற்பக் கலைதானே? தேயா ஒளிவீசும் திங்கட் கலைதானே? புத்தம் புதுத்தாது கோதும் குயில்தானே? புயல்தவழ் மலைச்சாரல் ஆடும் மயில்தானே? மன்றில் நிறுத்திய மாணிக்கப் பொம்மையோ? மாம்பழத் திடையிடைப் பொருந்திய செம்மையேர்? குன்ற மலர்த்தென்றல் அளிக்கும் குறுமையோ? குளிர்புனல் தாமரைக் கொடியின் வளமையோ?* துறை: ஐயம்.