பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 போதாதோ ? பொன்தேடச் சென்றனர் தோழி குடிசெய்யப் பொன்தேடச் சென்றனர் தோழி! என்னுள்ளம் கண்டவர், என்னை உணர்ந்தவர் சொன்ன சொற் கேட்காமல் என்னை மறந்துமே செந்தீப்போற் செக்கரும், அந்தி மயக்கமும், தென்றலும் வெண்கதிர்த்திங்களின் தேக்கமும் வந்தெனை வாட்டுதல் போத்ாதோ தோழி? வாழப் பொருள்தேவை அறிவிலார் நீதி! என்னிலை, உணவுண்ணு திருக்கின்ற செய்தி எவர்கண்டார்? எனப்பெற்ற தாயின் அநீதி! பொன்னல்ல வாழ்க்கைக்கு வேண்டிய துள்ளம்! போதாதோ மெய்க்காதல் எதிர்த்தேறும் வெள்ளம் ? 14