பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கேட்டாயா செய்தி? கேட்டாயா செய்தி?-தோழி! கேட்டாயா செய்தி ? தோட்டத்தில் வந்துநின்று தொடர்ந்தே எனஇறைஞ்சி கூட்டம் விழைந்தவந்தக் கொல்லேற்றின் ஒழுக்கத்தைக் சேரிப் பரத்தையிடம் சென்ருன் எனவறிந்தும் தெருவழி பார்த்துப்பார்த்தே கண்கள் மிகவருந்தும்! உருவினை அப்படியே உரித்து மகன்பிறந்தும். ஒழுக்கமிலா அன்பன் நினைவால் மனம்வருந்தும்! பூத்த மலர்ப்பொய்கை பரத்தையோ டன்று புதுப்புனல் ஆடிய செய்தியை இன்று பார்த்தவர் கூறினர்; அவனல்லன்' என்று பரிந்து வழக்குரைத்தேன்! திருந்துவ தென்று? io பா. பி.-2