இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குளம் பிறந்த ஆம்பல், நிலம் பிறந்த முல்லை உளம் களிக்கப் பூத்தே உயர் மணத்தை நல்கும்! ஏன் பிறந்தேன் நான்? பெயல் பிறந்த ஏரி, கயல் பிறந்த நன்செய், வயல் நிறைந்த சிற்றுார் மக்கள்பசி ஆற்றும்! ஏன பிறந்தேன் நான்? கடல் பிறந்த முத்து, கழிப் பிறந்த உப்பு, மடல் பிறந்த தாழை மற்றவர்க்காய் வாழும்! ஏன் பிறந்தேன் நான்? 3%