பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? எவர் தந்தார் : இந்த உலகினில் இருக்கும் பொருளெல்லாம் எவர் தந்தார்? இதாழிலாளர் தந்தார்! அந்நாள் முதல் இந்நாள் வரை எந்தப் பெருநாடும் இந்தத் தொழிலாளர் தந்த உழைப்பிலேயேல் குந்தி அழுதிடாதோ! அந்நாள் முதல் இந்நாள் வரை செந்நெல் விளைத்தவர் யார்? சிற்றுார் சமைத்தவர் யார்? கன்னல் விளேத்தவர் யார்? காட்டை அழித்தவர் யார்? பொன்னை விளைத்தவர் யார்? புதுவாழ்வு தந்தவர் யார்? மின்னல் தவழும் வானவெளியினை வென்றவர் யார்: 0 அந்நாள் முதல் இந்நாள் வரை ஆடை அளித்தவர் யார்? அணைகட்டித் தந்தவர் யார்? ஒடை கலக்கும் கடல் ஊர்மூழ்கிச் சென்றவர் யார்? கோடி கோடியாய்ப் பொருள் செய்துகுவித்தே நாட்டின் கொடுமை வறுமை மாற்றி வளமை அளித்தவர் யூார்? ஆந்நாள் முதல் இந்நாள் வரை ão