பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எப்படி? கருத்தைக் கவர்ந்தவன் கண்ணில் இருக்கையில் கண்ணை மூடுவதெப்படி?-அடி . கட்டிக் கரும்பே ! நீ செப்படி: இரவும் பகலும் உறக்கம் வரவில்லை; எத்தனை நாளைக்கு இப்படி?-அடி ஏந்திழையே! நீ செப்படி! கட்டி அணைத்தகை கண்ணில் இருக்கையில் கண்ணை மூடுவ தெப்படி?-அடி கார்குழலே நீ செப்படி பட்டப்பகலும் இரவுபோல் ஆனதே; பாசம் மறப்பதும் எப்படி?-வெள்ளிப் பால்நிலவே! நீ செப்படி! முத்தம் அளித்தவாய் கண்ணில்-இருக்கையில் மூடுவது கண்ணை எப்படி?-அடி முல்லைக் கொடியே! நீ செப்படி: நித்தம் நித்தம் நானே செத்து மடிகிறேன்; நினைவிலா திருப்பதும் எப்படி?-என் நேசக் கிளியே! நீ செப்படி: 51