பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புலியே, எழு! செத்த குழந்தையை வெட்டிப் புதைத்திட்ட செந்தமிழ் நாடுன்றன்நாடு !-தம்பி! வந்த பகை எதிர்த்தோடு! எத்தனை முடிமன்னர் எதிர்த்தனர், மாய்ந்தனர் என்பதை நீயறியாயோ ?-இன்று முன்வரு பகை நொறுக்காயோ ? நீர்தரு செல்வங்கள் நிலந்தரு செல்வங்கள் ஊரில் நிறைந்ததே தம்பி !-பகைப் போரை முறி வெற்றி நம்பி ! காருக்குப் பஞ்சமா ? . கழனிக்குப் பஞ்சமா ? போருக்(கு) ஏன் அஞ்சவேண்டும்?-தமிழ்ப் புலியே, எழு ! வெற்றி யாண்டும் ! 62