பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அன்னையே, வணக்கம்! அன்னையே வணக்கம் ! வணக்கம் ! என்னை ஈன்ற அன்னேயே வணக்கம் !! வணக்கம் ! இந்நாள் நீஇலை என்ருலும் தாயே உன்னை என்னுல் மறக்கவா முடியும் ? இளைய வயதில் இறந்தாய்; பிரிந்தாய்; எனினும் என்றன் உளத்தினில் நிறைந்தாய்! குளத்துத் தாமரை குளிர்முகத் தாயே!. கோடி கோடி வணக்கம் ஏற்பாயே வாயைக் கட்டி மருந்தை அளித்தாய்; பாயில்கண் மூடாது இரவைக் கழித்தாய்; காயும் நிலவைக் காட்டிச் சிரித்தாய்; தாயே மறப்பேனே அணைத்துக் களித்தாய்! ஒன்பது வயதில்தாய் அன்பை இழந்தேன்: ஒவ்வொரு நாளுமதை எண்ணி அழிந்தேன்; என்புதோல் பாட்டியின் ஆணைப்பில் வளர்ந் (தேன்; என்ருலும் அன்னையே உன்னேயா மறந்தேன்! 68.