பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

97

பணித்துக்கூட் நண்ணுந் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலந் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி யீண்டுதிரைப்
பெருங்கட னீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுயர் வானத் துறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்டொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி
நீடு வாழிய கெடுந்தகை, யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
துளிநசைப் புள்ளினின் அளிநசைக் கிரங்கிநின்
அடிநிழற் பழகிய அடியுறை

கடுமான் மாற, மறவா தீமே.”[1]

நன்மாறன்:-- செய்யுள் நன்றாகவே அமைந்திருக்கின்றது. இப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்.

பெரிய சாத்தனார்:- அரசே, யாம் விடை பெற்றுக் கொள்கிறோம். இனியேனும் புலவர்களை அவமதியாது ஆதரிக்க வேண்டுகின்றோம். இச்சம்பாஷணையின் பிறகு அரசன், அரசியல் அதிகாரிகளைக் காணற்குரிய அறைக்குச் சென்றான். புலவர், அரண்மனைக்கு வெளியே வந்து, தம் ஊர் சென்றார்.

————————————————————————

  1. புறநானூறு - செய்யுள், 198
7