பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

15

அச்செய்யுள் வருமாறு :

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.”[1]

இச்செய்யுளைக் கேட்ட அரசன் மேலும் மனம் பூரித்து, ஆரிய நாட்டிலிருந்து தான் கொணர்ந்த அரும் பொருள்களிற் சிலவற்றை அப்புலவர் பெருமானுக்குப் பரிசிலாக அளித்தனன்; அங்கிருந்த வேறு பல புலவர்க்கு யானைப் பரிசிலும், பாணர்க்குப் பொற்பூ நல்குதல் முதலிய சிறப்புக்களும் செய்தனன். அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த நெட்டிமையார், அரசனைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து, பின்வருமாறு பாடினர்:

“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூங்தல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி?
இன்னா வாகப் பிறர்மண் கொண்(டு)

இனிய செய்திநின் னார்வலர் முகத்தே.”[2]

  1. புறநானூறு - செய்யுள், 9.
  2. புறநானூறு - செய்யுள், 12.