பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பாண்டிய மன்னர்

புலவர் பெருமான் எழுந்து நின்று, பின் வருமாறு பிரசங்கித்தனர்:

“அரசர் தலைவ, யாம் இச்செய்யுளிற் பண்டைப் பழங்குடியாகிய நினது குடிப்பெருமையையும், நினது புகழையும் விளக்கும் கருத்தால் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை உறுதிப் பொருள்களையும் அமைத்திருக்கின்றேம். அது வருமாறு:

நினது புகழும் பிரதாபமும், வடதிசையில் இமய மலைக்கு வடக்கிலும், தெற்கிலே குமரிக்குத் தெற்கும், மேற்கிலே மேல் கடலின் மேல்பாலும், கிழக்கிலே சகரர் தொட்ட கடவின் கீழ்பாலும், கீழே சுவர்க்க மத்திய பாதாளம் என்ற மூன்று உலகங்களில் நிலவுலகத்தின் கீழும், மேலே கோலோ கத்தின் மேலும் பரவியுளது என்றமைக்கப்பட்டுளது. இஃது எவ்வாறெனில், பாரததேயம் முழுவதும் வென்று ஒரு குடைக்கீழ் ஆளும் சக்கரவர்த்தியாகையால், உனது புகழ் உன் நாட்டினுள் அடங்காமல் அயலவர் நாட்டிலும் பரவவேண்டுவது முறையே யெனவும்; யாகாதிகள் செய்து தேவர்களைத் திருப்திப்படுத்தி யிருப்பதால், மேலுலகங்களிற் பரவியுள தெனவும்; கடற்கப்பால் உள்ள அயல் நாடுகளிலும் தமிழ் நாட்டு மரக்கலங்கள் சென்று உனது புகழையே நாட்டுவதால், கடற்கப்பாற் பரவியதெனவும்; இமயமலையின் வடவெல்லையில் கயற்பொறி பொறித்து அதற்கு வடபால் உள்ள நாட்டவரும் எச்சமயத்தில் நம்மை எதிர்த்துப் போர் செய்து அடக்க வருவனோ என்று எண்ணித் திகிற்படுமாறு செய்து வந்துளாயாகையால், இமயத்துக்கு வடபாலும் பரவியுள நினது கீர்த்தியும் பிரதாபமும் எனக் கூறினோம்.

“இவ்வாறு, புகழ் பரவிய மன்னனாயிருப்பினும், இனியும் சிறப்புப் பெறுமாறு வாழ்தற்குரிய நன்னெறியைக் கடைப்-