பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

77

இந்த மாநாட்டில் நடைபெற்ற எல்லா விவரங்களையும் இரகசிய ஒற்றார்கள் மூலமாகத் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு, மறுநாளே எல்லாத் தலைவர்களையும் கைது செய்தது. ராஜன் பாபுவும் கைது செய்யப்பட்டார். அனைவரையும் ஆமதுநகர் சிறையிலே அடைத்தது. அந்த சிறையிலே உள்ள ஓர் உணவுண்ணும் அறையிலே தலைவர்கள் கூடிப் பேசியும் எதிர்காலத் திட்டத்திற்கு எவ்வழியும் புலப்படாமையால், மூன்றாண்டுகளாக இவ்வாறு சிறையிலே வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

மூண்டது இரண்டாவது உலகப் போர் - 1945 ஆம் ஆண்டில்! அரசு எல்லாத் தலைவர்களையும் சிறையிலே இருந்து விடுதலை செய்து வெளியே அனுப்பிவிட்டது. இந்தியர்களை இனிமேல் அடக்கி வைக்க முடியாது என்பதையும் அரசு திட்டவட்டமாக உணர்ந்து விட்டது.

அப்போது, இங்கிலாந்திலே தொழிற்கட்சி அரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. வைசியராய் காங்கிரஸ் கட்சியையும் - முஸ்லீம் லீக் கட்சியையும் இடைக்கால அரசு அமைக்குமாறு கூறினார். வைசியராயைத் தலைவராகக் கொண்ட மந்திரி சபையில் இரண்டு கட்சியினரும் பங்கேற்றார்கள்.

ஆனால், முஸ்லீம் லீக் கட்சியின் பிடிவாதத்தால் இடைக்கால அரசு பணியாற்ற முடியவில்லை. லீக் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அடிக்கடி இடையூறுகளை எழுப்பி, நாட்டுப் பிரிவினைதான் எங்களுக்குத் தேவை என்று பிடிவாதம் செய்து இடைக்கால அரசை இயங்கவிடாமல் செய்து வந்தார்கள். அதனால், அரசு நிலைகுலையும் நிலையேற்பட்டது.

வைசியராயின் இடைக்கால அரசில் ராஜன்பாபு உணவு அமைச்சராக இருந்தார். அக்காலம் உணவுத் தட்டுப்பாடு இருந்த