பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

129

வயிற்று வலி கடுமையாக இருக்கும். அதுவும் ஒருபக்கம் மட்டும் வலி கடுமையாக இருக்கும். சிறுநீர்ப் பரிசோதனை மூலம், கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், இதுபோன்ற நோயாளிகளின் கர்ப்ப பையின் வாயிலை மருத்துவர்கள் தொட்ட உடனேயே அலறி மயக்கம் அடைந்து விடுவார்கள்.

சிகிச்சை : லேப்ராஸ்கோப் மூலம், கருக்குழாயில் கரு பதிந்திருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு, கருக்குழாயில் நேரடியாக ஊசி மருந்தைச் செலுத்தி, கருவைச் சிதைத்து விட வேண்டும்.

கர்ப்பம் தரித்தவுடன் : கர்ப்பம் தரித்தவுடன், முதல் மூன்று மாதங்களுக்கு உடல் உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில், உடல் உறவு கொள்வதால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பம் தரித்துவிட்டோம் என்ற உணர்வே, பெண்களுக்கு வாந்தியை ஏற்படுத்தி விடுகிறது. உடலில் உள்ள ‘புரோஜஸ்டிரான்’ ஹார்மோன்களும், எச்சிஜி வேதிப்பொருள்களும், அதிக அளவில் உற்பத்தி ஆவதால், ஒவ்வாமை அதிகமாகி, வந்தி ஏற்படுகிறது. வாந்தி மூலம், உடலில் உள்ள நீர்ச் சத்து அதிகமாக வெளியேறுகிறது. வாந்தி அதிகமாக இருக்கும் நிலையில், நீர் இழப்பைத் தடுக்க, மருத்துமனையில் சேர்ந்து ‘டிரிப்ஸ்’ (குளுக்கோய்ஸ்) ஏற்றிக்கொள்வது நல்லது.

முதல் இரண்டு மாதங்கள்: கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதங்கள், மிக முக்கியமான காலகட்டமாகும். ஏனெனில், குழந்தையின் கை, கால் உள்பட அனைத்து உறுப்புகளும், முதல் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகின்றன. இந்த இரண்டு மாதங்களில், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும்