பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“பூபாலா, உன்னைப் பார்த்து அப்படி வாலை ஆட்டுதே நாய்க்குட்டி?” என்றாள் அஞ்சலை.

“ஆமாம், அம்மா. நான் அது உசிரைக் காப்பாற்றினேன். நன்றி சொல்லுது. நன்றி மறக்கக் கூடாதுன்னு ஒளவைப் பாட்டி சொன்னது இதுக்குக் கூடத் தெரியுதே! பாவம், அதோட தாயைத்தான் என்னாலே காப்பாற்ற முடியவில்லை. அம்மா, இனி இந்த நாய்க்குட்டியும் என்னோடே இருக்கட்டும்...” என்று பயந்த குரலில் கெஞ்சினான் அவன்.

“என்னா சொன்னே? இந்தத் தெரு நாய்க்குட்டிக்கு யார் படி அளக்கிறதாம்?... உள்ளதுக்கே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போடுறோம். போடா, போய் அதைத் தெருவிலே விட்டுட்டு வந்துடு,” என்று உத்தரவிட்டாள் அவன் அம்மா.

அப்பொழுது பூபாலனின் தந்தை முருகேசன் வந்தார். தன் புதல்வனை அழைத்து, “தம்பி, நீ அழுகாதே. நான் உன் நாய்க்குட்டியைக் காப்பாத்துறேன். நீ சும்மாயிரு...?” என்று சொன்னார்.