இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
17
விளம்பரத்தில் சிறுவன் சுதாகரின் படம் இருந்தது. ஒரு கணம் அவன் கண்ணை மூடிக் கொண்டான். சுதாகர் மாதிரி தானும் ஒரு ‘பால நட்சத்திரமாக’ ஆவது போன்ற இன்பக் காட்சிகள் தோன்றின.
பூங்கோதை அவன் தோளைத் தட்டி அழைத்ததும்தான், பூபாலனுக்குச் சுய நினைவு வந்தது.
“போகலாமா, கார் காத்திருக்குது?” என்று நினைவு படுத்தினாள் பூங்கோதை.
“இதோ, என் நாய்க்குட்டியையும் எடுத்துக்கிட்டு நொடியிலே ஒடியாந்திடுறேன்......!” என்று சொல்லிவிட்டு நாய்க் குட்டியைத் தேடினான் பூபாலன்.
ஆனால்
ஐயோ, நம்ப நாய்க்குட்டியை கார்ப்ப ரேஷன் நாய் வண்டியிலே தூக்கிப் போட்டுக்கிட்டு போயிட்டாங்களே! என்று அலறினாள் பூபாலனின் தாய்.
“ஐயோ!” என்று கூப்பாடு போட்ட வாறு, பூபாலன் வெறி பிடித்தவன்போலத் தெருவிலே ஒடிக் கொண்டிருந்தான்.