பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

27

பெற்றோர்கள் ஏறிக் கொண்டதைக் கண்ட பூபாலன் வியப்பிற்குள்ளானான்: அவனது வியப்பு அடங்குவதற்குள், அவனையும் கையைப் பிடித்துக் காருக்குள் அமர்த்திக் கொண்டார் அவனுடைய அப்பா.

பூபாலனுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. திரும்பிப் பார்த்தான். முன் ஆசனத்தில் அந்த சர்க்கஸ் முதலாளி சுகுமார் விஷமப் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்!