இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
29
“நன்றாகச் சிரிக்கிறிங்க! பாவம், நீங்கள் சினிமாவிலே சிரிக்கக் கற்றுக் கொடுக்கவென்று இருக்க வேண்டியவர், இங்கே சர்க்கஸிலே வந்து அகப்பட்டுக் கிட்டிருக்கீங்க போலிருக்கிறது!”
“தம்பி!”
“முதலிலே என்னைப் பெயரிட்டு அழையுங்க!”
“சூடாகப் பேசுகிறாயே?”
“இள ரத்தம் ஸார், இளரத்தம்!”
“பேஷ். நானே சொல்லலாமென்றிருந்தேன். நான் ஒரு அருமையான சிறுத்தை வளர்க்கிறேன். அதற்குக்கூட உன் போன்ற பையன்களின் இள ரத்தம்தான் தேவையாம். உன்னை அன்றைக்கு நான் காரில் போட்டு என் வீட்டுக்குக் கொண்டு வந்தேன் பார், அன்றிலிருந்தே அது சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இன்றுதான் என்னால் நிறைவேற்ற முடியப் போகிறது!”
“சந்தோஷம். அப்படியே செய்யுங்கள். நான் கூட முந்தி ஸ்கூலிலே பேசியிருக்-