பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

31

சர்க்கஸ் உரிமையாளர் சுகுமார் பேய்ச் சிரிப்புச் சிரித்தார். அடுத்த நிமிஷம், அங்கிருந்த பொத்தானை மெல்ல அழுத்தினார்.

அவ்வளவுதான்- பயங்கரமான உறுமல் முழங்க, அச்சம் தரும் பற்கள் ஒளியில் மின்ன, பெரிய சிறுத்தையொன்று தோன்றியது.

“ஐயோ அப்பா! ஐயோ, அம்மா!” என்று அலறினான் பூபாலன்.

அடுத்த தடவையும் சர்க்கஸ்காரன் பயங்கரமாகச் சிரித்தான்.

“தம்பி, உன் அப்பாவையும் அம்மாவையும் ஏன் வீணாகக் கூப்பிடுகிறாய்? அவர்கள் இருவரும் உன்னை என் வசம் ஒப்புவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இப்போது உன் கண்முன்னாலே நாடகம் ஆடுகிறதே? பாவம்...!”

“இரக்கப்படக் கூட உமக்கு நெஞ்சு இருக்குதா...?”

“இரக்கப்பட மட்டுமல்ல. உன்னை அகில இந்திய சர்க்கஸ் விளையாட்டுக்-