பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. என் நிலையிலே உங்க மகள் அல்லி அகப்பட்டுத் திண்டாடினால் என்ன பாடுபடும் உங்கள் மனசு? நினைச்சுப் பார்த்து, என்னை விட்டு விடுங்கள். ஸார், என் நாய்க் குட்டியைக் காணாமல் ஒரு நிமிஷம் கூட என்னாலே தங்க முடியாது!” என்று கண்ணிரைத் தாரை வார்த்துக் கெஞ்சினான் பூபாலன்.

சர்க்கஸ் மாஸ்டர் இம்முறை வாய்திறக்க வில்லை. அருகிலிருந்த பொத்தானை இடது கை நுனி விரலால் அழுத்தினார். சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அவன் முன் பாய்ந்தது.

“ஐயோ!” என்று கூக்குரலெழுப்பி பூபாலன். அவனுடைய தலை சுற்றியது.

அப்பொழுது ஒர் அதிசயம் நடந்தது. “பூபாலா, பயப்படாதே!”

எங்கிருந்தோ ஒரு குரல் சூன்யத்தைத் துண்டாடி எதிரொலித்தது. அதே வேகத்தில், பாய்ந்து கொண்டிருந்த அந்தச்