பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

35

சிறுத்தையின் உடலில் எங்கிருந்தோ ஒரு பட்டாக்கத்தி பாய்ந்து செருகிக் கொண்டது. மறுகணம் அந்தப் பயங்கரமான சிறுத்தை மாயமாக மறைந்து விட்டது!

என்ன அதிசயம் இது?

பூபாலனின் உடலில் வேர்வை ஊற்றெடுத்துப் பெருகியது.

“பூபாலா, பயப்படாதே! உன்னைப் படிய வைக்க எங்க நைனா செஞ்ச நாடகமாக்கும் இது!” என்று கூறி ‘கட கட’ வெடச் சிரிக்கலானாள் சிறுமி அல்லி.

“தங்கச்சி!” என்று உணர்ச்சிப் பெருக் கோடு அழைத்து, அல்லியைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் விட்டான் பூபாலன்.

“அண்ணா, என் அப்பாவின் இஷ்டத்துக்கு இணங்கி நட. நீ சர்க்கஸிலே விளையாட ஆரம்பிச்சா, நான்கூட உன்னோட சேர்ந்து விளையாடுவேன். நம்ப ரெண்டு பேரினாலேயும் எங்க கம்பெனிக்கும் நல்ல பேர் கிடைக்கும். எனக்காக வேண்டியாச்சும் சரி சொல்லு. இங்கே