பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

37

“ஐயா, ஆத்திரத்திலே வயசையும் வார்த்தையையும் மீறி என்னென்னமோ பேசிப்பிட்டேன். மன்னிப்பீங்களா? என்னோட நாய்க்குட்டி கிடைச்சப்புறம் இனி எனக்கு எந்தக் கவலையுமே இல்லை. உங்க 'நன்றிக் கடனை' அடைக்க வேண்டியது என் பொறுப்பாச்சே!... சினிமாவிலே அந்த சுதாகர் மாதிரி நடிக்க ஆசை கொண்டேன். இப்போ என்னாடான்னா சர்க்கஸ் மாஸ்டராக ஆகிறதுக்கு யோகம் வந்திருக்குது!...ம், இப்பவே எனக்கு சர்க்கஸ் ஆட்டத்தைக் கற்றுத்தர ஆரம்பிச்சிடுறீங்களா?” என்றான் பூபாலன், மகிழ்ச்சி கரைபுரள.

“ஓ. கே!” என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தார் சுகுமார்.



பா-3