இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
41
விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“முடியாது!”
“முடியாதா?”
“ஆமாம், முடியாது; முடியவே முடியாது!”
“பழிக்குப் பழியா?”
“இல்லை!”
“பிறகு.?”
“அன்புக்கு அன்பு!”
“என்ன, அன்புக்கு அன்பா? முன் ஒரு சமயம் என்னைத் தமிழ்ப் படம் ஒன்றிலே நடிக்கச் சொன்னாங்க. அங்கே இப்படித்தான் அழகான தமிழ் வார்த்தைகள் பேசினாங்க. நீங்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்தவரில்லையே? பிறகு, அன்பைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? ம்...! ஏன் தான் தெரியப் போகிறது? ”
“தம்பி, கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு அன்பைப் பற்றி என்ன தெரியும் என்றுதானே நீ சந்தேகப் படுகிறாய்? நியாயம் இருக்கிறது, உன் எண்ணத்தில்.